கனவும் காதலும்

Sunday, July 17, 2011 | Labels: | 0 comments |

Photobucket

கனவும் காதலும்
தூக்கம் வாங்கிக்கொண்டு கணவுகள் தந்தாய்.

கணவுகளை எடுத்துக்கொண்டு காதல் தந்தாய்.

காதலை தந்துவிட்டு இதயத்தை எடுத்துக்கொண்டாய்.

தற்போது என்னிடம் இருப்பது உன் நினைவுகள் மட்டுமே.


ஒரு முறை தான் உன்னை கடந்து சென்றேன்.

கவிஞ்ஞநாகிவிட்டேன் .


உன் கண்களால் என்னை கைது செய்கிறாய்,

உன் இதழ்களால் என் இதழ்களை காதல் மொழி மாற்றம் செய்கிறாய்.

உன் ஸ்பரிசத்தால் என்னை உனதாக்கினாய்.


காற்றை பிரித்து சுவாசம் தருகிறாய்…

நிலவை உறுக்கி வெளிச்சம் தருகிறாய்.

பூக்கள் கொண்டு வாசம் தருகிறாய்

உன் இதயம் கொண்டு ஏன் எனைக்கொள்கிறாய்?


உன் விழிகளுக்கு விடை கூற யாரால் முடியும்!


தேனிக்கள் ஒரு நாள் சோகமாக இருந்தன. நான் காரணம் கேட்டபோது

எந்த பூவிலும் தேன் இல்லை, அதனால் எங்களால் தேன் சேகரிக்க முடியவில்லை என வருத்தப்பட்டன. நீ எங்காவது தேன் உள்ள பூவை பார்த்தால் சொல்கிறாயா ? என்றன. நான் உன் முகவரி குடுத்து அனுப்பி வைத்தேன். தேனிக்களுக்காக கொஞ்சம் சிரியேன், நீ இதழ் விரித்து சிரிக்கும் போது அதன் ஓரமாக வடியும் தேனை அவைகளும் கொஞ்சம் குடிக்கட்டும்.



ஊறூக்குள் நீ வந்து விட்டாய் என்று அறிவித்தது ..

உன் வீட்டு வாசலில் நி போட்டு வைத்த கோலம்.


ஊர் உறங்கிய பிறகு உன் வீடிருக்கும் தெருவில் நகர் வலம் வருகிறேன் நான்.

நீ நடந்து சென்று வந்த உன் காலடிச்சுவடுகளை காற்று தூக்கிச்செல்லுமுன், கண்டுவிடமேண்டுமென்று..

நாம் முத்தமிடும் போது கேட்கும் சப்தங்கள் எங்கிருந்து வருகின்றன?

கொடுக்கும் உதட்டில் இருந்தா? இல்லை பெற்றுக்கொள்ளும் உதட்டில் இருந்தா?


உன் கைப்பேசியில் நீ எனக்கு கொடுத்த முத்தத்தால்

ஈரமாகிப்போனது என் கைப்பேசியின் முகப்பு.


வெட்கங்கள் அறியாது, நம் காதல் பாஷைகள்,

ஊடல்கள் குறையாது நம் காதல் வாழ்வினில்,

சட்டென்று முடியாது நம் காதல் யாத்திரை.

பெண்னென்ற பூ வா நீ.. ஜில்லென்ற குளிரா நீ...

சட்டென்று எனை நனைக்கும் விண் தூரல் மழையா நீ!

என் நெஞ்சிலே உன் ஞாபகம் ஊஞ்சலாய் எனை ஆட்டுதே!

நான் பார்க்கவும், நீ பூக்கவும் மெளனங்கள் மொழியானதே!

என்றும் அன்புடன்

அ. விமல்

நான் சுமந்து திரிகிற உன் நினைவுகள்.

| | 0 comments |

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE

உனக்கான பக்கங்களை படைக்க விரும்பினேன்,Photobucket

என்னிடம் உள்ளவை வெற்றுத்தாள்கள் மட்டுமே.

அதில், எழுத்துக்காளாயிருப்பது என்னோடு நான் சுமந்து திரிகிற உன் நினைவுகள்.

அ. விமல்


இதயமே... இதயமே.....

Saturday, October 30, 2010 | Labels: | 0 comments |

புரிதல்

புரிதல் இல்லா காதல் புனிதமடைவதில்லை.
புரிந்து கொண்ட காதுலுக்கு பிரிவு என்பது இல்லை.

களங்கறை விளக்கு நீ...........

உயிரே உன் ஞாபகம் அலையாய் எனை தாக்குதே,
நான் கறை சேர நீ கரம் நீட்ட தேவையில்லை....
ஒரு கணம் உன் விழிகளை என் பக்கம் திருப்பு களங்கறை விளக்காய்.....

கனவு..

அன்பே கனவிலாவது காதலைச்சொல் .
அப்படியாவது உறங்க மறுக்கும் என் விழிகளுக்கு உன் வார்த்தை தாலாட்டாகட்டும்..

கேள்வியும் பதிலும் நீயே....

நாம் சந்திக்கும் போது கேட்கிறாய் ஆயிறம் கேள்விகள்.,
உன் விழிகளால்........

அனைத்துக்கும் பதிலையும் நீயே தருகிறாய், உன் இதழ்களால் , முத்தம்.

முதல் கவிதை.

நான் எழுதிய முதல் கவிதை அவள் பெயர்.

அன்பே.........

காலை பனித்துளி,
அதிகாலை சூரியன்
மழையின் முதல் துளி = உன் முகம்

ஏமாற்றம்

அவள் என்னை வேண்டாம் சொன்ன போது
இதயத்தில் இடி, மிண்னல் ,
கண்களில் மழை கண்ணீராய்....

பகல் நிலாவே..............

| Labels: | 0 comments |

பகலில் இரவு தெரிகிறது.... உன் நிழலை கானும் போது.
உன் மௌனம் கூட சொல்கிறது - நீ அழகுக்கு மகளென்று

விதையில்லாமல் உருவானேன் , உன்னைக்கண்டு மரமாகினேன்.
என் உருவத்தை தேடுகிறேன், அதை உன் விழியில் கான்கிறேன்.

காதல் என்ற சொல்லின் அர்த்தம் இன்று புரிந்தது.
காலம் வாழ்த்து சொல்ல நம் காதல் வெல்லுமோ?

நம் காதல் தொடர் பயணம்

Tuesday, February 16, 2010 | Labels: | 0 comments |

நெஞ்சோடு கலந்திட்ட உன் சுவாசம்.
காதல் மொழி பேசிய உன் உதடுகள்.
அவ்வப்போது நீ போடும் வம்புச்சன்டைகள்.
நீ முகம் சாய்க்கும் என் தோள்கள்.
மறக்க முடியுமா ?..
நம் காதல் பயணங்களை......

சிற்ச்சில.....துளிகள்.

Tuesday, February 26, 2008 | Labels: | 1 comments |

பூக்களுக்கு பேச தெரியாது.
தெரிந்தாள் சொல்லிவிடும் ...........
இதயமே இல்லாத பெண்களுக்கு என்னை பரிசலிக்காதே என்று.


எல்லா ஆட்டோவிலும் எழுதப்பட்டிருக்கிறது,
ஆனால் எந்த மருத்துவமைனையிலும் எழுதப்படவில்லை
பிரசவத்திற்க்கு இலவசம் என்று.

இதயம் வலிக்கும்போது கண்களில் கண்ணீர் வரும்
அது காதல்.
உன் கண்களில் கண்ணீர் வரும்போது என் இதயம் வலிக்கும்
அது நட்பு.

புல் மிது பனி உறங்குகிறது,ஆனால்
பனி அறியவில்லை இன்னும் சிறிது நேரம்தான் வாழ்க்கை என்று

தொட்டு பேசுவதில்லை காதல்.
ஒரு பெண்ணின் மனதில் தொடுவது போல் பேசுவதுதான் காதல்.....

கல்லரையே.........

| Labels: | 0 comments |


மலர்கள் கல்லரையை பார்த்து சொல்லுகிறது,
அவலுக்காக என்னை கொன்றாய்,
அவல் உன்னையே கொன்றூ விட்டால்.....
இன்று உன்னருகில் என்னைத்தவிர யாருமில்லை.........

தோல்விகளே!

Monday, February 25, 2008 | Labels: | 0 comments |


இவள் தான் பெண்ணோ?

| Labels: | 0 comments |



எல்லா இலைகளுக்கும் நீ பனித்துளி,
எல்லா முகங்களுக்கும் நீ புன்னகை,
எல்லா மலைகளுக்கும் நீ அருவி,
எல்லா மலர்களுக்கும் நீ நறுமணம்,

நீதான் பெண்ணோ?

உன் நினைவொன்றே போதும்

Saturday, December 29, 2007 | Labels: | 2 comments |


சிறகுகள் வேண்டாம் பறப்பதற்க்கு,
நிறங்கள் வேண்டாம் இரசிப்பதற்க்கு,

மனங்கள் வேண்டாம் நுகர்வதற்க்கு,
உனர்வுகள் வேண்டாம் உனர்வதற்க்கு,

உன் நினைவொன்றே போதும்,
நான் வாழ்வதற்க்கு.

காதல் நினைவுகள்

Tuesday, October 30, 2007 | Labels: | 0 comments |

காதல் நினைவுகள்


எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும் அந்த பசுமையான நினைவுகள் என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது. அறக்க, பறக்க திரியும் தற்போதைய, இந்த இயந்திரமான வாழ்க்கையில், என்னையும் அறியாமல் என் எண்ண ஓட்டங்களில் அந்த நினைவுகள் அவ்வப்போது வந்து போவதுண்டு. ஏன் என்று எனக்குள் நான் பல முறை கேட்டதும் உண்டு. வரும் பதில் ....மாற்றங்களும், மறதியும் நிறைந்த மனித வாழ்க்கையில் அது மட்டும் மறக்க முடியாத பருவமடா.

பள்ளி படிப்பு முடிந்தது. இனி கல்லூரி... படிக்க தேவையில்லை, கிளாஸை கட்டடித்து விட்டு சினிமாவிற்கு போகலாம், என எண்ணற்ற கற்பனைகளோடும், கனவுகளோடும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். மிஞ்சியது ஏமாற்றமே. கல்லூரியில் உள்ள துறைகளில் மிகவும் கண்டிப்பான துறையில் எங்கள் துறை முதலிடம். தலைமுடி கொஞ்சம் அதிகமாக இருந்தால் துறை தலைவரே முடியை வெட்டி விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சற்று ஆறுதலான விஷயம். மொழி பாடங்களுக்குகான வகுப்புகள் பொருளாதார துறையுடன் இணைந்து நடப்பது. அங்கு தான், நான் என்னவளை பார்த்தேன். இப்போது நான் அவ்வாறு சொல்வது சரியல்ல. அதற்கான விடை முடிவில் உங்களுக்கே தெரியும். அழகாயிருந்தால், ஆரவாரமிருக்கும். அறிவிருந்தால் ஆணவமிருக்கும் என, என் அடிமனதில் இருந்த எண்ணம் அவளை பார்த்தவுடன் தூள் தூளானது. அமைதி, அடக்கம், அழகு, அறிவு என பல பண்புகளை ஒருசேர தன்னகத்தே கொண்டிருந்தாள்.

இதுவே என் பார்வை அவள் மீது விழக்காரணம். அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அவள் வீடருகே உள்ள கடை ஒன்றில் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அதேபோல், அவளது குடும்பம், குடும்பச் சூழல், அவளுக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, ஏன் அவ்வளவு... குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் என்றே சொல்லலாம். ஆனால் ஒன்றை தவிர.

அவள் விரும்பும் நடிகர், என் தலைவன் ஆனான். அவள் வரும் பாதையே என் பாதையானது. இப்படியே என் கல்லூரி பருவம் ஓராண்டு உருண்டோடிய நிலையில் நான் அவளை விரும்புவது அவளுக்கு தெரியவந்தது. எனினும், எந்தவித கருத்து பரிமாற்றங்களோ, எண்ணப்பரிமாற்றங்களோ எங்களுக்குள் இல்லை. ஓரிரு புண்சிரிப்புகள் மட்டுமே சிந்துவாள், அந்த நாளில் என் கால்கள் தரையில் படாது.

ஒவ்வொரு நாளும் என்னென்ன கலரில், எந்த வகையான உடை அணிந்து வருகிறாள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வேன். அவளிடம் எத்தனை டிரஸ் இருக்கிறது என்று எண்ணிடம் என் நண்பர்கள் கேட்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவள் வந்து என்னிடம் பேசுவாள் என்று. அந்த மூன்று வார்த்தை, அதற்காக நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று எனக்கு தெரியாது. அவள் சென்ன அந்த மூன்று வார்த்தை ஹேப்பி நியூ இயர். அந்த வருஷம் நான் கொண்டாடிய புத்தாண்டை என்னால் என்றும் மறக்க முடியாது.

காலங்கள் கடந்தன. கிட்டதட்ட என் கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டுகள் போகிவிட்டன. ஓரிரு வார்ததைகள் மட்டுமே பேசிய நிலையில் எப்படி என் காதலை அவளிடம் போய் சொல்வதென்று மனதுக்குள் குழப்பம். வீட்டில் பலமுறை சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவளை பார்த்தவுடன் வார்த்தைகள் வருவதில்லை. அதற்கும் மேல் என்னால் காதலை சொல்லாமல் இருக்க முடியவில்லை. உண்டா , இல்லையா என்று கேட்டுவிட மனசு துடித்தது.

அந்த நாளும் வந்தது. எனக்கு ரொம்பப் பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரில் அவள் அன்று கல்லூரி வந்திருந்தாள். மஞ்சள் கலர் சுடிதாரில் அன்று ரொம்ப அழகாக இருந்தாள். அன்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்தது. அவள் கிளம்பும் முன்பே நான் கிளம்பி விட்டேன். அவள் வரும் பாதையில் அவளுக்காக காத்திருந்தேன். அன்று இந்தியா - ஆஸ்ட்ரேலியா விளையாடிய ஷார்ஜா கோப்பை கடைசி போட்டி. போட்டியை காண வீட்டில் எனக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.

ஆனால்... நானோ அவள் வரும் பாதையில்... அவளும் வந்தாள். பொய்யான பெயரில் தான் அழைக்கிறேன். ரம்யா ஒரு நிமிஷம். உங்கிட்ட பேசனும். என்ன அலெக்ஸ் இங்க நிக்கிற. உன்கிட்ட பேசனும் ரம்யா. என்ன சொல்லு. ரம்யா நான் உன்ன லவ் பண்ணுரேன். ஐ.லவ்.யூ ரம்யா. இரண்டு நிமிஷம் மவுனமாக இருந்தாள். என்ன வார்த்தை அவள் வாயில் இருந்து வரும் என, என் எண்ண ஓட்டங்கள் அலைபாய்ந்தன. மனதுக்குள் குலதெய்வம் எல்லாம் வந்து போனது.

அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. நான் எதிர்பார்க்காத வார்த்தை. "நீ அண்ணன் மாதிரி" .....

என்றும் அன்புடன்

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

| Labels: | 0 comments |

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.

உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.

காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!
எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!
காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!

காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.

காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.

காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

காதல் பரிசுகள்

| Labels: | 0 comments |

காதல் பரிசுகள்

உங்கள் காதலருக்கு பரிசுகள் வாங்கிக் கொடுத்து உங்களது காதலை வெளிப்படுத்துங்கள்.

காதல் கவிதை அடங்கிய வாழ்த்து அட்டை
பூங்கொத்து
உடைகள்
இதய வடிவிலான பரிசுகள்
கையடக்க ரேடியோ
காதல் பாடல்கள் அடங்கிய சிடி
கைகடிகாரம்
செல்பேசி
பொம்மைகள்
வளர்ப்புப் பிராணிகள்
பறவைகள்
விரும்பிய உணவுப் பொருட்கள்
திருத்தலங்களின் பிரசாதங்கள்
இயற்கைக் காட்சி புகைப்படங்கள்
அழகிய கீ செயின்கள்